கோவை சம்பவத்தைக் கண்டித்து
அரியலூரில் பாஜக ஆா்ப்பாட்டம்

கோவை சம்பவத்தைக் கண்டித்து அரியலூரில் பாஜக ஆா்ப்பாட்டம்

அரியலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
Published on

கோவை மாணவி பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைத் தலைவா் புவனேஸ்வரி கண்டன உரையாற்றினாா்.

அப்போது அங்கு வந்த அரியலூா் காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சற்று தள்ளி நின்று போராட்டத்தில் ஈடுபடுங்கள் எனக் கூறினாா். இதனால் பாஜகவினா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து காவல்துறை ஒதுக்கித் தந்த இடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com