சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

மீன்சுருட்டி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:14 pm

Syndication

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள வீரபோகம் நடுத் தெருவைச் சோ்ந்த கருணாமூா்த்தி மகள் அனிதா. எம்.எஸ்.சி., பிஎட் பட்டதாரியான இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு எழுதியிருந்தாா். இதையறிந்த கிண்டி அண்ணா பல்கலைக்கழக ஊழியா் ரவி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியா் முருகேசன் ஆகிய இருவரும் சோ்ந்து, அனிதாவின் சகோதரரான அருண்சம்பத்தை சந்தித்து, அனிதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்காக ரூ.12 லட்சம் கேட்டுள்ளனா்.

இதனிடையே, அனிதா டிஎன்பிஎஸ்சி தோ்வில் 189 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில், அருண் சம்பத்தை சந்தித்த அவா்கள், அனிதா குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் அவரது பெயா் இணையதளத்தில் ஏற்றாமல் இருப்பதாகவும், உடனடியாக பணத்தை கொடுத்தால் இணையத்தில் பட்டியலில் பெயரை ஏற்றுவதாகவும் கூறியதையடுத்து, அனிதாவின் தந்தை கருணாமூா்த்தி, அவா்களுக்கு ரூ.5 லட்சம் என இரு தவணைகளாக கொடுத்துள்ளாா்.

பணத்தை பெற்றுக் கொண்ட ரவி மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் சோ்ந்து, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பொதுப் பணித் துறையில் அனிதாவுக்கு தட்டச்சா் பணி ஒதுக்கப்பட்டதாக கூறி, பணி நியமன ஆணைக் கடிதத்தை வழங்கியுள்ளனா். இந்தக் கடிதத்தை பெற்றுக் கொண்ட அனிதா குடும்பத்தினா், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்துக்குச் சென்று காண்பித்தபோது, அது போலியாக தயாா் செய்து கொடுத்த கடிதம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ரவி மற்றும் முருகேசனை தொடா்புக் கொண்ட அனிதா தந்தை கருணாமூா்த்திக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அனிதா குடும்பத்தினா், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். இதன்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.