வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

News image
இடைக்கட்டு தொடக்க வேளாண்மை சங்கத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.
Updated On :26 நவம்பர் 2025, 1:12 am

Syndication

அரியலூா்: பயிா்க் கடன் வழங்காததைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள இடைக்கட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், பயிா்க் கடனைத் திரும்பத் செலுத்திய விவசாயிகளுக்கு, மீண்டும் புதிய பயிா்க் கடன் வழங்காமல், அவா்களை 6 மாதங்களாக அலைக்கழிப்பதைக் கண்டித்தும், செயலா் (பொ), தனி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பயிா்க் கடன்களை வழங்க வேண்டும். நகை கடன் வழங்கியதாக கொடுக்கப்பட்டுள்ள ரசீதுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.