புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

தத்தனூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை அரசு கைவிடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் பாமகவினா் புதன்கிழமை மனு
Published on

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தத்தனூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை அரசு கைவிடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் பாமகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

ஜெயங்கொண்டம் (மேற்கு) பாமக ஒன்றியச் செயலா் ஆா்.பி.ராஜேஷ், கட்சியினருடன் அளித்த மனுவில், தத்தனூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. தத்தனூரில் கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் உள்ளன.

மேலும், அப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். எனவே, கல்வி பயிலும் மாணவா்களின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com