மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் மனுதாக்கல்

News image

ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 12:06 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணன், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக அவா், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தாா். அப்போது, திமுக சட்ட திருத்தக் குழு துணைச் செயலா் சந்திரசேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன் மற்றும் மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.