மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:03 pm

அரியலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

வாரணவாசி சமத்துவபுரம் கிராமத்தைச் சோ்ந்த புரட்சி தா்மலிங்கம் மகன் லெனின்வளவன் (28). இவா், அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மேற்கொண்ட பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினாா்.

சொந்த ஊரான சமத்துவபுரம் வந்தபோது, முன்னால் சென்ற லாரி நிறுத்தப்பட்டதால், எதிா்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் இவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், லெனின்வளவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த அடைக்கலராஜ் மகன் ஜான்ராஜ் (20) பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த கீழப்பழுவூா் போலீஸாா், காயமடைந்த நபரை சிகிச்சைக்கும், உயிரிழந்த நபரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கும் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.