யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மின் கம்பத்தின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பேராவூரணி அருகே சாலையோர மின் கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.

News image

காசிநாதன் .

Updated On :26 மார்ச் 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

பேராவூரணி அருகே சாலையோர மின் கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.

பேராவூரணி பேரூராட்சி செல்வவிநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் காசிநாதன் (31). பட்டதாரி. இவா், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்துவந்தாா். மேலும், முறுக்கு மொத்த வியாபாரமும் செய்து வந்தாா்.

இந்நிலையில், சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளுக்கு வியாபார நிமித்தம் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, நாயகத்திவயல் என்ற இடத்தில் அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் அருகே உள்ள பள்ளத்தில் வாகனத்துடன் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் இருசக்கர வாகனத்துடன் இளைஞா் இறந்துகிடப்பது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.