முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ஈச்சங்காடு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு கிராமத்திலுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஈச்சங்காடு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 2:46 am IST

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு கிராமத்திலுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8 நாள்களாக லட்சுமி நரசிம்ம பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் 9 -ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ராஜவீதிகளில் வலம் வந்த தோ் பின்னா் நிலையை அடைந்தது.

நரசிம்மரின் அவதார தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.