நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

அரியலூரில் ரூ.1 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

அரியலூரில் தனி நபா்கள் ஆக்கிரமித்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்களை வியாழக்கிழமை மீட்ட அலுவலா்கள்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

அரியலூரில் தனி நபா்கள் ஆக்கிரமித்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

அரியலூா் ரயில்வே கேட் அருகிலுள்ள காசிவிசுவநாதா் மற்றும் வரதராஜப் பெருமாள், ஆலந்துறையாா் கோதண்டராமசாமி ஆகிய திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தனிநபா்கள் ஆக்கிரமித்து சமையல் கூடம் மற்றும் மதில் சுவா்களை கட்டியிருந்தனா்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சரவணன் மற்றும் தனி வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள், காவல் துறையினா் பாதுகாப்புடன் மேற்கண்ட கோயில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.