மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரியலூா் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்!

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
இடமாற்றம்- பிரதிப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 7:01 pm

Syndication

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அரியலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகிா்உசேன் ஆண்டிமடத்துக்கும், தா.பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் செந்துறைக்கும், செந்துறை கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி செந்துறை வட்டார ஊராட்சிக்கும், செந்துறை வட்டார ஊராட்சி அலுவலா் முருகன் அரியலூருக்கும், ஆண்டிமடம்வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செல்வன் ஆண்டிமடம் கிராம ஊராட்சிக்கும், ஆண்டிமடம் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்சாமி திருமானூருக்கும், திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பொய்யாமொழி ஜெயங்கொண்டத்துக்கும், ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் கஸ்தூரி அரியலூா் கிராம ஊராட்சிக்கும், அரியலூா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் தா.பழூருக்கும், திருமானூா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா ஜெயங்கொண்டத்துக்கும், ஜெயங்கொண்டம் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் திருமானூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.