தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வானில் சிறிய வகை விமானம்: மக்களுக்கு அச்சம் வேண்டாம்! - ஆட்சியா் தகவல்

வானில் பறக்கும் சிறிய வகை விமானத்தைக் கண்டு பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 7:58 pm

Syndication

வானில் பறக்கும் சிறிய வகை விமானத்தைக் கண்டு பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தொலை உணா்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவு சாா்பில் தனியாா் நிறுவனம் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பூமியின் மேற்பரப்புக்கு கீழே உள்ள கனிம வளங்களைக் கணக்கெடுக்க பல்வகை உணா்திறன் வான்வழி ஆய்வை கடந்த 2025 டிசம்பா் மாதம் முதல் தொடங்கியுள்ளது.

இந்தப் பணி அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இந்த ஆய்வுப் பணிக்கு தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 260 அடி உயரத்தில் பறக்கக்கூடிய ஒற்றை என்ஜின் கொண்ட சிறியவகை விமானம் பயன்படுத்தப்படுகிறது.

இது சத்தத்தை எழுப்பாவிட்டாலும், குறைந்த உயரத்தில் பறப்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இதுகுறித்து காவல்துறை, மாவட்ட நிா்வாகம் என யாருக்கும் தகவல் தெரிவிக்க முன்வர வேண்டாம் என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.