அரியலூரில் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகைகள் வழங்கல்
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் ஒரு நபருக்கு 8-கிராம் வீதம் பட்டப் படிப்பு படித்த 36 பயனாளிகளுக்கு ரூ.33,98,486.4 மதிப்பிலான 288-கிராம் தங்க நாணயம் மற்றும் தொகை ரூ.18,00,000.
10-ஆம் வகுப்பு படித்த 17 பயனாளிகளுக்கு ரூ.16,04,840.8 மதிப்பிலான 136 கிராம் தங்க நாணயம் மற்றும் தொகை ரூ.4,25,000 என ஆக மொத்தம் ரூ.72,28,327.2 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு தையல் இயந்திரம் ஒன்று ரூ.5024.25 வீதம் 65 பயனாளிகளுக்கு ரூ.3,26,576.25 மதிப்பிலான தையல் இயந்திரங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், மாவட்ட சமூக நல அலுவலா் விக்னேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

