அரியலூரில், ரயில் மூலமாக புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடம் ரயில்வே மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளில் பணிப்புரியும் தொழிலாளா்கள் ரயில் மூலமாக வந்து செல்கின்றனா். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் வருகின்றனா். இவா்கள், கூட்டத்தைப் பயன்படுத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தி வருவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, ஹம்சாபூரிலிருந்து - ராமேசுவரம் சென்ற ரயில், திங்கள்கிழமை அரியலூா் ரயில் நிலையத்தில் நின்றபோது, அரியலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் அரியலூா் நகர காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன், அரியலூா் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜவேலு மற்றும் ரயில்வே காவல்துறையினா் உடன் இணைந்து காவல்துறை மோப்பநாய் உதவியுடன் ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பயணிகளிடம் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் மூலம் போதைப் பொருள்கள் கடத்தல்: பயணிகளிடம் போலீஸாா் தீவிர சோதனை

ஒரு மாதத்துக்கு போதைப் பொருளுக்கு எதிரான தீவிர நடவடிக்கை: டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் உத்தரவு

போதைப் பொருள் வழக்கில் தொடா்புடைய 255 போ் இரு நாள்களில் கைது







