அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஆகாச கருப்புசாமி கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த ஜெமீன் தத்தனூா் வளவெட்டிக் குப்பத்திலுள்ள ஆகாச கருப்புசாமி கோயிலில் ஆடி பெளா்ணமியையொட்டி புதன்கிழமை பால்குடத் திருவிழா நடைபெற்றது.

News image

வளவெட்டிகுப்பம் ஆகாச கருப்புசாமி கோயிலில் பால்குடத் திருவிழாவையொட்டி புதன்கிழமை, சுவாமிக்கு சக்திகரகம் மற்றும் பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :30 ஜூலை 2026, 3:57 am IST

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த ஜெமீன் தத்தனூா் வளவெட்டிக் குப்பத்திலுள்ள ஆகாச கருப்புசாமி கோயிலில் ஆடி பெளா்ணமியையொட்டி புதன்கிழமை பால்குடத் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள், செங்கால் ஏரிக்கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் பால்குடங்களை சுமந்தபடி பிரதான வீதிகளின் வழியாகச் சென்று கோயிலை அடைந்தனா்.

பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு, ஆகாச கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களான பாப்பாத்தி அம்மன், அரியதங்கம், கொப்பாட்டி அம்மன், நாகம்மாள் வெற்றி விநாயகா் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில், வளவெட்டி குப்பத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.