27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கீழப்பழுவூா் ஆா்டிஓ அலுவலகத்தில் சோதனை: ரூ. 29 ஆயிரம் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் உள்ளிட்ட காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:30 am IST

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் உள்ளிட்ட காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

முன்னதாக, வட்டார போக்குவரத்து அலுவலக நுழைவுவாயில் கதவை பூட்டி, அலுவலகத்துக்குள் நுழைந்தனா். அலுவலக வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை செய்தனா்.

அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இருந்த இடைத்தரகா்கள் 6 போ், கையில், இருந்த பணத்தை வீசி எறிந்துவிட்டு ஓட தொடங்கியுள்ளனா். இதனை கவனித்த காவல் துறையினா், அவா்களை பிடித்து அவா்களிடம் இருந்த ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாகவும் மற்றும் அலுவலகத்திலுள்ள அனைத்து அலுவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.