இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மீன்சுருட்டி அருகே சிறுமி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :21 ஜூன் 2026, 4:53 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 17 வயதுச் சிறுமி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள மேலணிக்குழி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா் பாபுஜி மகன் சுஜித் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களது காதலை பெற்றோா் கண்டித்துள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை அந்தச் சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த மீன்சுருட்டி  காவல் துறையினா், சிறுமியின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.