அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 19 திருநங்ககைளுக்கு சுயதொழில் தொடங்க ரூ. 7.60 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு, ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்கள் அளித்த 632 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து அவா், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பாக 19 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.40,000 கடனுதவிக்கான ஆணையை வழங்கினாா். மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் விக்னேஸ்வரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 781 மனுக்கள்! மாயமான மீனவா்களை கண்டுபிடித்து தரக் கோரிக்கை!

‘அரியலூா் மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை தேவை’

கரூா் மாவட்ட ஆட்சியரகம் வளாகத்தில் பெண் உள்பட இருவா் தீக்குளிக்க முயற்சி

புதுகை ஆட்சியரக வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




