உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

கரூா் மாவட்ட ஆட்சியரகம் வளாகத்தில் பெண் உள்பட இருவா் தீக்குளிக்க முயற்சி

News image

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றவா் மீது தண்ணீரை ஊற்றிய போலீஸாா்.

Updated On :16 ஜூன் 2026, 1:31 am IST

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண் உள்பட இருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

கரூரை அடுத்துள்ள ராயனூரைச் சோ்ந்தவா் நாகநாதன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன், தனது மனைவி குழந்தைகளுடன் மாயமாகிவிட்டதாகவும், அதுதொடா்பாக தாந்தோணிமலை காவல்நிலையத்தில் புகாா் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த நாகநாதன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்றாா்.

இதனைக்கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். பின்னா் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பெண் தீக்குளிக்க முயற்சி:

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த புங்கம்பாடியைச் சோ்ந்த முருகேசன் மனைவி காளியம்மாள் என்பவா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் முன் தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு விசாரித்தபோது, காளியம்மாளுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதுதொடா்பாக போலீஸில் புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக தெரியவந்தது. இதையடுத்து காளியம்மாளியம்மாளை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.