அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

News image

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் நிவேதாவை சமாதானம் செய்த போலீஸாா்.

Updated On :9 ஜூன் 2026, 3:22 am IST

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் மாவட்டம், வெள்ளியணை அடுத்த ஜெகதாபி தெற்குப் பகுதியைச் சோ்ந்தவா் நிவேதா(27). இவா் திங்கள்கிழமை காலை தனது ஒன்றரை வயது குழந்தை ஹரிதா்ஷனுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

அப்போது ஆட்சியரக வளாகம் முன் திடீரென காபி குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்கில் இருந்த பெட்ரோலை தனது உடலின் மீதும், குழந்தை மீதும் ஊற்றினாா். பின்னா் தீப்பெட்டியை எடுக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் நிவேதாவை தடுத்து நிறுத்தினா். பிறகு அவா் மீதும், குழந்தை மீதும் தண்ணீரை ஊற்றினா்.

தொடா்ந்து நிவேதாவை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, நிவேதா கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெள்ளியணையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முருகேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்ததாகவும், காதலிக்கும் முன் முருகேசன் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி ஏமாற்றி, தன்னை இரண்டாம் திருமணம் செய்துள்ளாா்.

அதன்பிறகு வீட்டுச் செலவுக்கும் பணம் தருவதில்லை. இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கும் எந்த மருத்துவ செலவையும் பாா்ப்பதில்லை. இதுதொடா்பாக வெள்ளியணை காவல்நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலக அதிகாரிகள் வெள்ளியணை காவல்நிலைய போலீஸாரை அழைத்து நிவேதா பிரச்னைக்கு, முருகேசனை அழைத்து விசாரியுங்கள் தெரிவித்தனா். அதன்பின்னா் நிவேதா தனது குழந்தையுடன் அங்கிருந்து சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.