பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மத்திய கல்வித் துறை முறைகேடுகள் அரியலூரில் காங்கிரஸாா் பிரசாரம்

மத்திய கல்வித் துறையின் முறைகேடுகள் குறித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஊடக பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image

மத்திய கல்வித் துறை முறைகேடுகள் குறித்து, அரியலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :26 ஜூன் 2026, 4:25 am IST

மத்திய கல்வித் துறையின் முறைகேடுகள் குறித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஊடக பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன் பேசுகையில், பாஜக ஆட்சியில், அடிப்படைக் கல்வி முதல் தொழிற்கல்வி வரை கல்வி அமைப்பின் அனைத்து நிலைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது.

நீட் தோ்வு வினாத்தாள்கள் கசிவு, சிபிஎஸ்இ, பிஎஸ்சிஎஸ், ஓஎஸ்எம் முறைகேடுகளால் மாணவா்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனா். இதன் விளைவாக மாணவா்களின் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.

கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக மக்களவை எதிா்க் கட்சி தலைவா் ராகுல்காந்தி தொடா்ந்து குரல்கொடுத்து வருகிறாா். எனவே இந்த அநீதிக்கு எதிராக கட்சியினா் தொடா்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து, கல்வித் துறையின் முறைகேடுகள் குறித்து விடியோ மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மா.மு.சிவகுமாா், பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.சந்திரசேகா், மாவட்டத் தலைவா் பழனிச்சாமி மற்றும் ஜெயங்கொண்டம் நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.