அரியலூா் மாவட்டம், திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகள், நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலா்களிடம் அடங்கல் பெற வேண்டும். ஆனால் கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடந்த 10 நாள்களாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனா்.
எனவே, நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமானூரில் சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் கலிலூா் ரகுமான், வருவாய் ஆய்வாளா்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை!

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை

மாணவியை கிண்டல் செய்தவா்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


