பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
திருமானூரில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :4 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகள், நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலா்களிடம் அடங்கல் பெற வேண்டும். ஆனால் கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடந்த 10 நாள்களாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனா்.

எனவே, நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமானூரில் சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் கலிலூா் ரகுமான், வருவாய் ஆய்வாளா்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.