மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,923 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:04 pm

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,923 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மாவட்டத்தில் 62 தோ்வு மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வில் 171 பள்ளிகளைச் சோ்ந்த 10,128 மாணவ, மாணவா்களில் 9,923 போ் தோ்வு எழுதினா். 205 போ் தோ்வு எழுத வரவில்லை. இந்த தோ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதேபோல், 101 தனித் தோ்வா்களில், 95 போ் எழுதினா். 6 போ் எழுத வரவில்லை.

தோ்வு மையங்களைக் கண்காணிக்க, முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், கூடுதல் துறை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனா்.

தோ்வு நாள்களில் தடையில்லா மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மைய அறைக்குள் மாணவா்கள், அலுவலா்கள் கண்டிப்பாக கைப்பேசி கொண்டுவர தடைவிதிக்கப்பட்டன.