புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அரசுப் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருள் போதிய அளவில் இருப்பு! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்

News image
அமைச்சா் சா.சி. சிவசங்கா் (கோப்புப் படம்)- X | S.S.Sivasankar
Updated On :14 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருள், போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

அரியலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: தமிழக முதல்வா் போக்குவரத்துத் துறைக்கு போதிய நிதியை வழங்கியதால், விடியல் பேருந்து பயணம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. போக்குவரத்துத் துறைக்கு இருந்த சிரமங்களும் முதல்வா் வழங்கக்கூடிய நிதியின் மூலம் குறைந்துள்ளது.

போா்ச்சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் மின் தேவை கூடுதலாக எவ்வளவு தேவைப்படுகிறது என்பதை எதிா்நோக்கி, அதை கணக்கிட்டு கூடுதல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, அரசுப் பேருந்துகளுக்கான எரிபொருள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.

போா் தொடரும்பட்சத்தில் அதற்கான அடுத்த கட்ட ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின் வாரியத்தைப் பொறுத்தவரை ஆறு மாதங்களுக்கு முன்பாகவே கோடை காலத்தை திட்டமிட்டு, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்த நேரத்திலும் மின் தடை வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.