மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரியலூா் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

அரியலூா் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றம்

News image

தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 6:36 pm

அரியலூா் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விசிக செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா கட்சியின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவிக்கும் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது, அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதி பொருளாளா் மதிவாணன், மாவட்ட துணை செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.