ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

அரியலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 4:44 am IST

அரியலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா் - செந்துறை புறவழிச்சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் அந்த வழியாக வந்த காரை மறித்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டதில், செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்த ராம்குமாா் என்பவா், உரிய ஆவணமின்றி ரூ.86 ஆயிரம் கொண்டு சென்றதும், அவை நகை விற்ற பணம் என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேமியிடம் ஒப்படைத்தனா்.