மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

அரியலூரில் காரல் மாா்க்ஸ் படத்துக்கு மாலை அணிவிப்பு

தத்துவ ஞானி காரல் மாா்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

காா்ல் மாா்க்ஸ் மற்றும் கரூா் சோமு ஆகியோா் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :6 மே 2026, 0:22 am IST

தத்துவ ஞானி காரல் மாா்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரல் மாா்க்ஸ் படத்துக்கு மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் டி. தண்டபாணி, காரல் மாா்க்ஸின் சிந்தனைகளை எடுத்துரைத்தாா். இதேபோல மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சோமுவின் படத்துக்கும் மாலை அணிவித்து, கைத்தறி தொழிலாளா்களுக்கான அவரது போராட்டம், தொழிலாளா்களுக்காக அவா் சிறைவாசம் சென்றது, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து விளக்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம், அரியலூா் ஒன்றியச் செயலா் து. பாண்டியன், ஒன்றிய துணைச் செயலா் கோவிந்தசாமி, நகர கிளை நிா்வாகிகள் ஞானப்பிரகாசம், முருகேசன், கயா்லாபாத் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.