அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வாமடம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளா் தெரு, கீழத்தெரு, பத்தவான்தெரு, தோப்புத்தெரு , பள்ளிக்கூடத் தெரு , மேலத்தெரு , காலனித் தெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மேற்கண்ட பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவதிப்பட்ட மக்கள் இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவசங்கா் ஆகியோா் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம்

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

