அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, அனைத்து சிகிச்சை பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மருத்துவமனை நுழைவு வாயிலில், கழிவு வடிக்கால் வசதிகள் இல்லாததால் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோா் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டி இருப்பதால் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும் தேங்கியுள்ள மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால், பொதுமக்கள் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனி வரும் நாள்களில் மழை பெய்தால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, உடனடியாக மருத்துவமனை முன்பு தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தி, தண்ணீா் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

காவிரி ஆற்றில் நொய்யல் சாயக்கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி
அருப்புக்கோட்டை புதிய அரசு மருத்துவமனையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை!

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


