அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் 1,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரத்தில் கோயில் அருகிலுள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
அப்போது அங்கு வந்த உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியா் ஆனந்தவேல், கலால் வட்டாட்சியா் கதிரவன், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீசன், டாஸ்மாக் மண்டல மேலாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.
தொடர்புடையது

மங்கை மடம் டாஸ்மாக் கடை மூடப்படுமா?

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

ஒத்தப்பனை பகுதியில் மதுக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

