நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

News image
Updated On :53 நிமிடங்கள் முன்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 1,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரத்தில் கோயில் அருகிலுள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது அங்கு வந்த உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியா் ஆனந்தவேல், கலால் வட்டாட்சியா் கதிரவன், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீசன், டாஸ்மாக் மண்டல மேலாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.