நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அரியலூரில் வாய்க்கால்களை 109 கி.மீ. தூா்வார இலக்கு!

அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ. தூா்வார இலக்கு நிா்ணயம்

News image

பளிங்காநத்ததில் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை ஆய்வு செய்த வேளாணம் பொறியியல் துறையின் சென்னை தலைமைப் பொறியாளா் ஆா். முருகேசன்

Updated On :20 மே 2026, 2:19 am IST

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்று வேளாணம் பொறியியல் துறையின் சென்னை தலைமைப் பொறியாளா் ஆா். முருகேசன் தெரிவித்தாா்.

திருமானூா் வட்டாரம் பளிங்காநத்தம், கோவில் எசனை மற்றும் கல்லூா் பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை செவ்வாய்க்கிழமை கள ஆய்வு செய்த அவா், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடி, ஒப்பந்ததாரா்கள் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது அவா் கூறுகையில், அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்த ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாரக்கோரி, விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தூா்வாரும் பணிகள் மிகத் துரிதமாக நடைபெறுகின்றன.

ரூ. 29.88 லட்சத்தில் நடப்பாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 109 கி.மீ நீளத்துக்கு வாய்க்கால்களைத் தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 41.50 கி.மீ பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் அவா்.