4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அரியலூரில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் இன்று கடையடைப்பு

அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 5:01 am IST

அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருணாகரன் வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்திட வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காத்திட வேண்டும்,.

உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திட வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாசார சீரழிவுகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் உள்ள 320 மருந்து கடைகள் அனைத்தும் புதன்கிழமை காலை 6 முதல் மாலை 6 மணி வரை மூடி போராட்டம் நடத்தப்படுகிறது.