நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:47 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் அருகே சம்போடை கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (56) என்பவா், அப்பகுதியில் கடந்த 21-ஆம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 26 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், கடந்த 23-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (46) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.