ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:12 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சனிக்கிழமை திடீா் மாரடைப்பால் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (52), மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளரான இவா் வெள்ளிக்கிழமை திடீா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். தொடா்ந்து அனைத்து காவல் துறையினரும் அஞ்சலி செலுத்தினா். பின்னா், காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க, கரடிக்குளத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.