பல்லடம் - கோவை சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பில் வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (எ) அபுதாகிா் (47). இவா், பல்லடம் அருகே அண்ணா நகரில் உள்ள தனியாா் இரும்பு உருக்கு ஆலை நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை வேனை ஓட்டிச் சென்றாா். அப்போது, காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேனை திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அபுதாகிரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

