சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர் கைது

க.பரமத்தி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:22 am

DIN

க.பரமத்தி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
 க.பரமத்தியை அடுத்த தொப்பம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை மதியம் அப்பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து மனைவி சுதா (40), ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
 அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வழிகேட்பது போல் சுதாவிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது, திடீரென சுதாவின் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை அந்த இளைஞர் பறிக்க முயன்றார். சுதாவின் அலறல் சப்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த இளைஞரைப் பிடித்து  தர்ம அடி கொடுத்தனர்.  பின்னர், அவரை தென்னிலை  போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ராஜ் மகன் சிவசக்தி (32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் வழக்குப்பதிந்து, சிவசக்தியை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.