கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு: உறவினர்கள் மறியலுக்கு முயற்சி

மின்சாரம் தாக்கி இறந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:19 am IST

மின்சாரம் தாக்கி இறந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கரும்புலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (35). இவர், லந்தக்கோட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவிற்கு அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டாராம்.  அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த பாண்டியனை ஊழியர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். 
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் இழப்பீடு தர வேண்டும் எனக்கூறி கரூர் அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள பழைய சேலம் புறவழிச்சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸாரும், குஜிலியம்பாறை போலீஸாரும் அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.