தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  ஏப். 9 -இல் சமரசத் தீர்வு  

கரூரில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் மூலம் வழக்குகளில் தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்  வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:19 am IST

கரூரில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் மூலம் வழக்குகளில் தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்  வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். 
இதுதொடர்பாக ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தனி நபர்கள் அல்லது அமைப்புகள் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு, வழக்குகளுக்கு மத்தியஸ்தம்  மற்றும் சமரசப் பேச்சு மூலம் எளிய வழியில்  இரு தரப்பினரின் கருத்தொற்றுமையுடன்  தீர்வு காண்பதை வலியுறுத்தி, மத்தியஸ்தம் தொடர்பாக பொதுமக்களிடையே  பெருமளவில்  விழிப்புணர்வை உருவாக்கும்  வகையில் விழிப்புணர்வுக் கூட்டம்  நடத்தப் பட உள்ளது.    இந்த விழிப்புணர்வு  கூட்டம் வரும் 9 ஆம் தேதி கரூர் மாவட்ட   ஒருங்கிணைந்த  நீதிமன்ற கட்டட  வளாகத்தில்  நடைபெறும். 
கூட்டத்தில்  உயர்மட்ட  நீதித்துறை  அலுவலர்களுடன்,  மாவட்ட ஆட்சியர்,  கரூர் மாவட்ட  கண்காணிப்பாளர்  மற்றும்  இதர மாவட்ட  அலுவலர்கள் பங்கேற்பார்கள். பொதுமக்கள் இக்கூட்டத்தில்  பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம்  மற்றும்  சமரச  நடவடிக்கைகள்  மூலம்  தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.