வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

"தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால்  இலக்கை எளிதில் அடையலாம்'

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்வின் இலக்கை எளிதில் அடையலாம் என்றார் முன்னாள் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எம்.பொன்னவைக்கோ. 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:53 am

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்வின் இலக்கை எளிதில் அடையலாம் என்றார் முன்னாள் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எம்.பொன்னவைக்கோ. 
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அன்னை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக தரவரிசை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயமும் வழங்கி மேலும் அவர் பேசியது: 
வாழ்வியல் நெறிமுறைகளைத் தருவது திருக்குறள். திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. திருக்குறளை பின்பற்றினால் வாழ்வில் மேன்மை அடையலாம்.  தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் வாழ்வின் இலக்கை எளிதில் அடையலாம். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. அத்தகைய திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் சமுதாயத்தில் நம்மைத் தேடி புகழ் வரும் என்றார். 
முன்னதாக  கல்லூரி  முதல்வர் சாருமதி வரவேற்றார். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஆர்.மலையப்பசாமி தலைமை வகித்தார்.  அறக்கட்டளை தலைவர் எஸ்.ராமமூர்த்தி, பொருளாளர் என்.கந்தசாமி, செயல் அறங்காவலர் தங்கராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
விழாவில், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர். வணிக மேலாண்மை துறைத்தலைவர் வினோதா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.