மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அவதூறு : அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது

கரூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் குறித்து முகநூலில் தவறான தகவல் தெரிவித்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும்  நடத்துநரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:50 am

DIN

கரூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் குறித்து முகநூலில் தவறான தகவல் தெரிவித்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும்  நடத்துநரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 கரூர் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து நடத்துநராகப் பணியாற்றுபவர் முத்துசாமி. அதே பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர் சுப்ரமணி. இவர்கள் இருவரும், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். 
இவர்கள் கடந்த 19 ஆம் தேதி சிஐடியு சார்பில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற வாயில்கூட்டத்தில் போக்குவரத்து கிளை மேலாளர் ராஜேந்திரன் குறித்து தவறாகப் பேசியதாக கூறப்படுகிறது. 
இதனை தனது முகநூலிலும், கட்செவியிலும் பரப்பினார்களாம்.  இதுகுறித்து கிளை மேலாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பணிமனைக்கு வேலைக்கு வந்த இருவரையும் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.