மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணியில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது ஞாயிற்றுக்கிழமை (22-ம்தேதி) இரவு 8.30 மணி முதல் 30,000 கன அடியாகவும், திங்கள்கிழமை முதல் 50,000 கன அடியாகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்ட காவிரி ஆற்றின் கரையோர ப்பகுதிகளிலும், வெள்ள நீர் எளிதாக புகுவதற்காகன வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றில் இறங்கி குளிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களும், சிறியவர்களும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கரையோரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு தண்டாரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஓடிடியில் பிளாஸ்ட் எப்போது?

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


