15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கிராமசபைக் கூட்டத்தில் நியாயவிலைக் கடை பதிவேடுகள் தணிக்கை :ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் ஜன.26 ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் நியாயவிலைக்கடை பதிவேடுகள்

Updated On :23 ஜனவரி 2019, 7:17 am IST

கரூர் மாவட்டத்தில் ஜன.26 ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் நியாயவிலைக்கடை பதிவேடுகள் தணிக்கை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்த.அன்பழகன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பொது விநியோகத் திட்டம் மற்றும்  நியாய விலை கடைகள் செயல்பாட்டில் தூய்மையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில்,  நியாய விலை கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்குள்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் தினத்தையொட்டி, ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும்  கிராமசபைக் 
கூட்டங்களில், கிராமப்புற நியாய விலை அங்காடிகளில் பயன்படுத்தப்படும்,  அனைத்து பதிவேடுகள் மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை,  பயனாளிகளின் பட்டியல் சமுதாய தணிக்கைக்குழுவின் தணிக்கைக்கு வைக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். எனவே பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.