இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தேரோட்டம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

Updated On :23 ஜனவரி 2019, 7:16 am IST

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கட்டளைதாரர்கள் மண்டகப்படியும், ஜன.20 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
தைப்பூசத் தினமான திங்கள்கிழமை காலை  முதல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை நடந்தது.  சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  
காலை முதல் பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து வந்து தங்கள்  வேண்டுதல்களை நிறைவேற்றினர் . 
மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வசேனா சமேத  பாலசுப்ரமணிய சுவாமி எழுந்தளிய பின்னர் தேர் வடம்பிடிக்கப்பட்டது. 
காந்தி நகர் வரை தேரை இழுத்த பக்தர்கள் பின்னர் நிறுத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து,  இரண்டாம் நாளான  செவ்வாய்க்கிழமை  மாலை  மறுதேர் இழுத்தல் நடந்தது.  ஏராளமான பக்தர்கல்  கந்தம்பாளையம் வழியாக தேர் வடம்பிடித்து  இழுத்து சென்று மலையடிவாரத்தில் மீண்டும் தேர்நிலையில் நிறுத்தினர்.
கோயில் செயல் அலுவலர் சுரேஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், பேரூராட்சி செயல்அலுவலர்கள் புஞ்சை புகழூர் சத்தியமூர்த்தி, காகிதபுரம் வெங்கடேசன், தோட்டக்குறிச்சி பாலசுப்ரமணியன்,  காகிதபுரம்  பேரூராட்சி முன்னாள் தலைவர் கமலக்கண்ணன், பேரூர் செயலர்கள் புஞ்சை புகழூர் சரவணன், காகிதபுரம் சதாசிவம், தோட்டக்குறிச்சி அன்பழகன்,  முன்னாள் மாவட்டக் கூட்டுறவு அச்சக தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டோர் தேரோட்டத்தில் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.