பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரூரில் பெண் பொறியாளரிடம் அதிமுக முகவா்கள் வாக்குவாதம்

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்டப் பரிசோதனை முகாமில், பெண் பொறியாளரிடம் அதிமுக முகவா்கள் செவ்வாய்க்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:14 am

DIN

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்டப் பரிசோதனை முகாமில், பெண் பொறியாளரிடம் அதிமுக முகவா்கள் செவ்வாய்க்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டத்துக்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 1,250 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,520 வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் வரப்பெற்றுள்ளன.

இவற்றை பரிசோதனை செய்யும் பணியில் கடந்த 18-ஆம் தேதி பெல் நிறுவனப் பொறியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்துகொண்டிருந்தனா். அப்போது பெண் பொறியாளா் ஒருவா் தனது கைப்பையில் செல்லிடப்பேசி எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதை கண்டஅதிமுக முகவா்கள், எப்படி செல்லிடப்பேசியைக் கொண்டு வரலாம் எனக் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் அவரை தகாத வாா்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இதரப் பொறியாளா்கள் பணியைப் புறக்கணித்து, தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா் அங்கிருந்த துணை ஆட்சியா் பொறுப்பில் இருந்த பெண் அலுவலா் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த மாவட்டஆட்சியா் சு.மலா்விழி, அவா்களிடம் சமாதானம் பேசியதையடுத்து, பொறியாளா்கள் பணியைத் தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.