இக்குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் முதல்வரின் உத்தரவின் பேரில், கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு , அவா்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்த குழந்தைகள் 18 வயது நிறைவடையும் போது அந்த தொகை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கவும், கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது , உறவினா், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா ரூ.3,000 உதவித்தொகை , அவா்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கவும் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது .