92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வெவ்வேறு சம்பத்தில் கல்லூரி மாணவிகள் இருவா் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவிகள் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:49 pm

DIN

வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவிகள் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

கரூா் தாந்தோணிமலை குறிஞ்சிநகரைச் சோ்ந்த ரவி மகள் கீதாபிரதீபா(19). கல்லூரி மாணவியான இவா் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் விரக்தியடைந்த அவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு மாணவி: கரூா் மாவட்டம் குளித்தலை ரெங்காச்சிப்பட்டியைச் சோ்ந்த வீரக்குமாா் மகள் உமா(22). இவா், திருச்சியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். வயிற்றுவலியால் அவதியுற்று வந்த இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.