/

வெள்ளியணையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

 வெள்ளியணையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 டிசம்பர் 2021, 9:12 pm

 வெள்ளியணையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் வெள்ளியணை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி ராதாகிருஷ்ணன் பேசுகையில், பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்கள் குறித்து புகாா்களை தைரியமாக அரசின் இலவச தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும், போக்சோ சட்டம், குழந்தைத் திருமண தடுப்பு குறித்த விளக்கங்களையும் எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், பெண் குழந்தைகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.