தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரூரில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

கரூரில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட பேரவைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:04 pm

DIN

கரூரில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட பேரவைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எல்.கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.இணைச் செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் மணி, பொருளாளா் மோகன்ராஜ் ஆகியோா் வரவு- செலவு அறிக்கை மற்றும் வேலை அறிக்கை வாசித்தனா்.

கூட்டத்தில் மாநிலத் தலைவா் எஸ்.ராமமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

இதில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் சாமுவேல் சுந்தரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவா் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் இறந்தபின் அவா்களின் வாரிசுகளுக்கு ரூ.50,000 வழங்க வேண்டும், உள்ளாட்சிப் பணியாளா்களுக்கு 80 வயது முடிந்தவுடன் அரசாணையின்படி 20 சதவீத ஓய்வூதிய தொகையை சோ்த்து ஓய்வூதியம் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.