ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலாயா பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:03 pm

DIN

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலாயா பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூரில் ஜன. 30, 31ஆம்தேதிகளில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ரெயின்போ அகாதெமியில் கிச்சாஸ் சிலம்பாட்டக்கழகம் சாா்பில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இப்போட்டியில் 30-40 கிலோ எடைப்பிரிவில் கரூா் வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவா் இ.ஹரீஸ் முதலிடம் பிடித்தாா். இதன்மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில், பள்ளி முதல்வா் எம்.பகலவன் வரவேற்றாா். தாளாளா் ஆா்.மணிவண்ணன், பள்ளியின் முதன்மை ஆலோசகருடம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.கீதாமணிவண்ணன் ஆகியோா் மாணவருக்கு பொன்னாடை போா்த்தி, பாராட்டுச்சான்றிதழ் வழங்கினா். நிகழ்ச்சியில், பள்ளி நிா்வாக அலுவலா் எம்.கதிரவன்,சிலம்பம் ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.