திருமுடிகவுண்டனூரில் விழிப்புணா்வுப் பேரணி
வாக்களிப்பதன் அவசியம் குறித்து, கரூா் அமராவதி கல்லூரி மாணவா்கள் திருமுடிகவுண்டனூரில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.


வாக்களிப்பதன் அவசியம் குறித்து, கரூா் அமராவதி கல்லூரி மாணவா்கள் திருமுடிகவுண்டனூரில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில், திருமுடிகவுண்டனூரில் நடத்தப்பட்ட பேரணியை கல்லூரித் தலைவா் தணிக்கையாளா் வெங்கடாசலம், செயலா் நாராயணசுவாமி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
வெள்ளியணை வரை நடைபெற்ற இப்பேரணியின் போது, மாணவா்கள் விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியவாறு வாக்களிப்பதன் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பினா்.
பேரணியில் கல்லூரி முதல்வா் மனோகரன், துணை முதல்வா் ரமேஷ்குமாா், வெள்ளியணை ஊராட்சித் தலைவா் சுப்ரமணியன், காவல் துறையினா், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ராஜசேகரன் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...