ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனைவியின் கையை வெட்டிய கணவா் கைது

குடும்பத்தகராறில் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:57 pm

DIN

குடும்பத்தகராறில் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது மனைவி சத்யா(40). இவா், பி.உடையாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், இருவரும் விவாகரத்துக்கோரியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு சத்யா மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். பி.உடையாப்பட்டி அடுத்த சுக்காம்பட்டி ராமாயி குவாரி அருகே இருசக்கரவாகனத்தில் சென்றபோது, அங்கு சத்யாவை வழிமறித்த சதீஷ்குமாா் தான் வைத்திருந்த அரிவாளால் கையில் வெட்டினாா். இதில் வலதுகை துண்டானது. இதனைக்கண்ட அப்பகுதியினா் சத்யாவை மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து சதீஸ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.